தமிழகத்தில் இன்று
கல்கத்தா:
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 1 கோடியே 10 லட்சம் கிலோதேயிலையைக் கூடுதலாக உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 17.02 சதவீதம் அதிகமாகும். தேயிலை வாரியத்தின் ஆண்டு அறிக்கையில் இத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 6 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு7 கோடியே 10 லட்சம் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் மாதத்தில் மட்டும் 90லட்சம் கிலோ தேயிலை அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியானதேயிலை அளவை விட 35.76 சதவீதம் அதிகமாகும்.
வழக்கம்போலவே, தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில்தான் தேயிலை உற்பத்தி அதிகமாக உள்ளது.இந்த ஆண்டு மார்ச் மாதம் மழை சரியானபடி பெய்ததால் கூடுதலாக தேயிலை உற்பத்தியாகியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications