தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
கொச்சி விமானநிலையத்தில் வெடிகுண்டு புரளி

ஆலுவா:

கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தியையடுத்து அங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் முழுவதும் பதட்டம்நிலவியது. அங்கு அன்று நடக்க வேண்டியிருந்த பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டன.

செவ்வாய்கிழமை மதியம் இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி செய்தி ஒன்று வந்தது.

இதையடுத்து விமானநிலையம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும்,மோப்பநாய்ப்படையும் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

ஆனால் விசாரணையில் வெடிகுண்டுகள் எதுவும் எங்கேயும் வைக்கப்படவில்லை என்று தெரிய வந்தது.

அதேபோல் செவ்வாய்க்கிழமை இரவில் இந்த விமானநிலையத்தில் இறங்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தப் போவதாக திருச்சி விமானநிலையக் கன்ட்ரோல் நிலையத்திற்கு செய்திகள் வந்திருப்பதாக அவர்கள் கொச்சிவிமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடித்து அங்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் சில நொடிகளில் அந்த செய்தியும் வதந்தி என்று தெரிய வந்தது.

இந்த இரண்டு வதந்தி செய்திகளையடுத்து விமானநிலையம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+