குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க மைக் டைசனுக்கு பெண்கள் எதிர்ப்பு
லண்டன்:
முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன், ஜூன் மாதம் ஸ்காட்லாந்தில் நடைபெறஉள்ள போட்டியில் பங்கு கொள்ள இங்கிலாந்து நாட்டில் உள்ள பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.
1992-ம் ஆண்டு கறுப்பர் இனத்தைச் சேர்ந்த அழகியைக் கற்பழித்த குற்றத்துக்காக மைக் டைசனுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்காட்லாந்து போட்டியில் கலந்து கொள்ள டைசனுக்கு விசாவழங்கக்கூடாது என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஸ்காட்லாந்தில் ஜூன் நடைபெற உள்ள போட்டியில் லோ சாவரெஸி என்ற வீரரை எதிர்த்து விளையாட மைக்டைசன் திட்டமிட்டுள்ளார். பெண்கள் அமைப்பினருக்கு ஆதரவாக, ஆளும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சிலபிரதிநிதிகளும் டைசனுக்கு விசா வழங்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம், மான்செஸ்டரில் இங்கிலாந்து ஹெவிவெயிட் சாம்பியன் ஜூலியஸ் பிரான்சிஸ்ஸைஎதிர்த்து விளையாட மைக் டைசனுக்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டபோது அதை பல்வேறு பெண்கள்அமைப்பினர் எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.