தமிழகத்தில் இன்று
புவனேஸ்வரம்:
ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிறிஸ்தவர்களாக மாறிய சுமார் 1 லட்சம் பேரை மீண்டும் ஹிந்துக்களாக மாற்றம் செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் இத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்து ஜாக்ரன் சம்முக்கிய பிரிவு அமைப்பாளர் சுபா சவுகான்தெரிவித்தார்.
ஒரிசாவில் மலைவாழ் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்களை கிறிஸ்தவ அமைப்புகள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்துள்ளன. கிறிஸ்தவஅமைப்புகள் சிறு பயனைக் காட்டி மக்களை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியுள்ளன.
அவ்வாறு கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்ட சுமார் 1 லட்சம் பேரை படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் ஹிந்துக்களாகமதமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எங்களது நடவடிக்கையில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், பன்பாஸி கல்யாண் ஆஷ்ரம் ஆகிய அமைப்புகள் பங்கு கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. ஒரிசாமாநிலம் முழுவதும் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்தி அந்த நிகழ்ச்சிகளில் மதமாற்றம் செய்யப்படும். பழங்குடியின மக்களில் 10 ஆயிரத்துக்கும்அதிகமானவர்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்காக சுந்தர்கர் பகுதியில் அடுத்த மாதம் ஒரு நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் சவுகான்.
ஐ.ஏ.என்.எஸ்.