2001-ல் டெல்லியில் ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
புது தில்லி:
முதல் ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியத் தலைநகர் புது தில்லியில் 2001-ம் ஆண்டு நவம்பர்மாதம் நடைபெற உள்ளது.
செவ்வாய்க்கிழமை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
முதல்முறையாக நடைபெற உள்ள இப் போட்டியில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களைச் சேர்ந்த 96 நாடுகள்பங்குகொள்ளும். அதலெடிக்ஸ், குத்துச் சண்டை, நீச்சல், கால்பந்து, டென்னஸ், துப்பாக்கிச் சுடுதல் ஆகிய 6பிரிவுகளில் 10 நாட்களுக்கு இப் போட்டிகள் நடைபெறும்.
இப் போட்டிகளுக்கு எவ்வளவு செலவாகும் என்று இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆசிய நாடுகளுக்கும்ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே கலாசார மற்றும் விளையாட்டு உறவுகளை மேம்படுத்த இப் போட்டிகள்உதவும். போட்டிகள் நடைபெறும் தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தில்லியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் அதலெடிக்ஸ் போட்டிகளும், ஐஜிஐ மைதானத்தில் குத்துச்சண்டைப் போட்டிகளும், தல்கதோடாவில் நீச்சல் போட்டிகளும், கார்ணி சிங் மையத்தில் துப்பாக்கிச் சுடுதல்போட்டிகளும், ஆர்.கே. கன்னா டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் போட்டிகளும், டாக்டர் அம்பேத்கர்மைதானத்தில் கால்பந்துப் போட்டிகளும் நடத்தப்படும்.
1982-ம் ஆண்டு நடந்த 9-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில்பல நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச விளையாட்டுப் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.