For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
அரசு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் - கோவா அரசு அறிமுகம்

பனாஜி:

நாட்டிலேயே முதன்முறையாக மாநில அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டத்தை கோவா அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது.

சுமார் 15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்த ஊழியர்களுக்கு, பல சலுகைகளுடன் இந்த திட்டத்தை கோவா அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களைப் பின்பற்றி முதன் முறையாக இத்தகைய திட்டத்தை கோவாஅரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அரசு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தைஅறிமுகப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையையும் கோவா அரசு பெற்றுள்ளது.

15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்த எந்த அரசு ஊழியரும், தான் பணியாற்றும் துறையின் தலைவருக்கு எழுத்து மூலம்விண்ணப்பிக்கவேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தைப் பரிந்துரைக் கமிட்டி பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறைச்செயலர் மற்றும் அமைச்சருக்கு அனுப்பும். அதன்பிறகு இறுதி உத்தரவு வழங்கப்படும்.

விருப்ப ஓய்வு பெற தகுதியுடைய ஊழியர், ஓய்வு பெற விரும்பினாலும் அதை நிராகரிக்க அரசுக்கு அதிகாரம்உள்ளது என்றும், அந்த ஊழியருக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X