தமிழகத்தில் இன்று
சென்னை:
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் செய்த ஊழல்களுக்காக தனி நீதிமன்றம் மட்டுமல்ல; தனிச் சிறைகளும்அமைப்போம் என்று சட்டசபையில் அதிமுக உறுப்பினர் சுந்தரம் ஆவேசமாக பேசினார்.
சட்டசபையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் சுந்தரம் பேசியதாவது:
இந்த கூட்டத்தொடர் நாளையுடன் முடிகிறது. இதுவே இந்த ஆட்சியின் கடைசி சட்டசபைக் கூட்டத் தொடராகஇருக்கும். குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கும் முன்பே அதிரடியாக தேர்தல் வரலாம்.
எனவே அடுத்து எங்கள் ஆட்சி தான். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி எங்கள் கட்சியினர்மீது வழக்குகளை போட்டுள்ளீர்கள். அதற்காக தனி நீதிமன்றங்களை அமைத்துள்ளீர்கள்.
நீங்கள் விஞ்ஞானரீதியில் ஊழல் செய்துள்ளீர்கள். அதையெல்லாம் ஜெயலலிதா தலைமையில் எங்கள் ஆட்சிவந்ததும் வழக்குகள் போட்டு விசாரிப்போம்.
அதற்காக தனி நீதிமன்றங்கள் அப்படியே தொடரும். ஆனால், நாங்கள் புதிதாக தனிச் சிறைகளை ஏற்படுத்துவோம்என்றார்.
சுந்தரத்தின் இந்த ஆவேசப் பேச்சை அமைதியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications