தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி
கொழும்பு:
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு நகரில் புததர் பிறந்த நாள்விழாவில் நடந்த குண்டுவெடிப்பில் மூத்த போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர்கொல்லப்பட்டனர்.
புத்தர் பிறந்தநாள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் புதன்கிழமைகொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு நகரிலும் இதுபோன்ற விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
விழா நடந்து கொண்டிருந்தபோது, திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில்மூத்த போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் இறந்தனர்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் நகரைக் கைப்பற்ற இலங்கை ராணுவத்துடன்விடுதலைப் புலிகள் கடுமையாக சண்டையிட்டு வரும் நேரத்தில் மட்டக்களப்பு நகரில்குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications