தமிழகத்தில் இன்று
ஜம்மு:
காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராஜோரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்தது. ஜம்மு அருகே ராணுவத்தினர் மறைவிடங்களில் ஒளிந்திருக்கும்தீவிரவாதிகளை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதை எதிர்பாராத தீவிரவாதிகள் திடீர் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்காங்கே சிதறி ஓடஆரம்பித்தனர்.
அப்போது இரண்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதேபோல் ராஜோரி மாவட்டம் கெய் சோபாட்டா பகுதியிலும் ராணுவத்தினர்தீவிரவாதிகளை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இதில் 5 தீவிரவாதிகள் இறந்தனர். சம்பவ இடத்தில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற ஏகே 47 ரக துப்பாக்கிகள், 13 புத்தகங்கள், வெடிபொருட்கள்,ஜெலாட்டின் குச்சிகள் ஆகியவற்றைப் போலீசார் கைப்பற்றினர்.
இதே போல் உதம்பூர் பகுதியில் இரண்டு தீவிரவாதிகளைப் ராணுவத்தினர் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications