தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் அனைத்தையும் விலக்குவது தொடர்பான சட்ட மசோதா (பில்)அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமெரிக்க எம்.பி சாம் பிரவுன்பேக்தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சாம் பிரவுன்பேக், தெற்காசியப் பகுதிகளுக்கான அமெரிக்க நாடாளுமன்றத்தின்வெளிவிவகாரத் துறை துணை கமிட்டியின் தலைவராக உள்ளார். இந்தியாவுக்கு எதிரான அனைத்துபொருளாதாரத் தடைகளையும் விலக்குவது தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரமுடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
1998-ம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை நடத்தியதன் மூலம் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள்விதிக்கப்பட்டன. அவ்வப்போது சில தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், இந்தியா மீது இன்னும் பல தடைகள்அமலில் உள்ளன. இந்தியா மீதான தடைகளை விலக்க அதிபர் பில் கிளின்டனுக்குத் தான் முழு அதிகாரம் உள்ளது.
பொருளாதாரத் தடைகளால் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடியவில்லை. ஆகவே,தடைகளை முழுவதுமாக நீக்குவது தொடர்பாக வெளிவிவகாரத் துறை மசோதாவில் புதிய திருத்தங்களைச்செய்துள்ளேன். இவை விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். இந்த மசோதா மீது அடுத்தவாரம்வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
தடைகள் நீக்கப்பட்டால்தான் இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதாரத் துறையில் இணைந்துசெயல்படமுடியும். ஆகவே, என்னால் என அதிகாரத்துக்கு உட்பட்டு இந்தியா தொடர்பாக வெளிவிவகாரத் துறைமசோதாவில் திருத்தம் செய்துள்ளேன். இத் திருத்தங்களுடன் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டால் இந்தியா மீதானதடைகள் விலக்கிக் கொள்ளப்படும்.
சமீபத்தில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கிளின்டன், இந்தியா மீதான பொருாதாரத் தடைகளைவிலக்கிக் கொள்வது தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கிளின்டன்அவ்வாறு செய்யாதது எனக்கு பெரிய ஏமாற்றமாகிவிட்டது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (சிடிபிடி) இந்தியா கையெழுத்திடாதவரை அதன் மீதான தடைகள்விலக்கிக் கொள்ளப்படாது என்று அமெரிக்க அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகவே, தடைகளை விலக்கிக்கொள்ள சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா நிர்பந்திக்கலாம் என்றார்பிரவுன்பேக்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications