தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் கழகத்தில் (நேஷனல் சயின்ஸ் அகாடமி) 4 இந்திய விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் இந்தியாவிலும் இருவர் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ட்போர்டு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் கல்லூரிப் பேராசிரியர் தாமஸ் கைலாத், கொலராடோ கெமிக்கல் கைனடிக் பிரிவுத்தலைவர் ஏ.ஆர் ரவீந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர இந்தியாவில் பெங்களூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் சேர்மன் ரோதம் நரசிம்மா, மற்றும் பெங்களூர் இந்தியன்இன்ஸ்டீட்யூட் ஆஃப் சயன்ஸ் பேராசிரியர் கே.ஆர்.ராமநாதன் ஆகியோரும் தேசிய அறிவியல் கழகத்தில் (என்ஏஎஸ்) சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து தேசிய அறிவியல் கழகத்தில் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.
என்ஏஎஸ் முழுவதும் தன்னாட்சி அமைப்பாகும். இங்கு இயற்பியல், ரசாயனம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள்நடத்தப்படுகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.