தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
முதல்வர் காரில் செல்வதைப் படம் பிடித்த 3 பேர் கைதாகி விடுதலை

சென்னை:

முதல்வர் கருணாநிதி கோட்டைக்குக் காரில் செல்வதை வீடியோவில் படம் எடுத்த மூவர் கைது செய்யப்பட்டனர்.இதனால் ஏற்பட்ட திடீர் பரபரப்புக்குக் குழப்பம் தான் காரணம் என்பது பின்னர் தெரிய வந்தது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து முதல்வர் கருணாநிதி காரில் கோட்டை புறப்பட்டார்.அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் அவர் வருமபோது காலை 9.10 மணி.

அப்போது சாலையில் மூவர் வீடியோ காமிரா சகிதமாக நின்று முதல்வரை படம் எடுத்தனர். இதைப் பார்த்ததும்பதட்டமடைந்த போலீசார் உடனடியாக அந்த மூவரையும் பிடித்தனர். அவர்களிடம் படம் எடுக்க அனுமதிபெற்றீர்களா? என்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கூறிய விவரம்:

திருச்சியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் கலைக்காவிரி பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்தஅமைப்பின் சார்பில் முதல்வரின் 77 வது பிறந்தநாளை ஒட்டி ஒரு டாக்குமென்ட்ரி படம் வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் அன்றாடப் பணிகள் எப்போது துவங்கி எப்போது முடிகிறது எத்தனை மணிநேரம் அவர் பணிபுரிகிறார்என்பதைப் படம் எடுப்பதற்காக முதல்வரிடம் அனுமதியும் பெற்றனர். அதில் ஒரு பகுதியாக முதல்வர்கோட்டைக்கு செல்வதை படம் எடுப்பதற்காக அவர்களுக்கு அண்ணா சமாதி அருகில் அனுமதி தரப்பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் அந்த அனுமதி பற்றி போலீசாரிடம் தெரிவிக்காமல் அண்ணாசிலை அருகில் நின்று படம்எடுத்ததால் ஏற்பட்ட குழப்பம் என்பது தெரிந்தது. இந்த குழப்பம் முதல்வர் கொடுத்த விளக்கத்திற்கு பின்னர் தான்விடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+