For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கைத்தடியில் ராணுவ முகாமே இல்லை என்கிறது இலங்கை ராணுவம்
கொழும்பு:
கைத்தடியில் தங்களுக்கு முக்கிய ராணுவ முகாமே இல்லை என இலங்கை ராணுவம் கூறியுள்ளது. ஆனால்,அரியாலி பகுதியில் ராணுவம் பின் வாங்கியுள்ளது என அறிவித்துள்ளது.
முன்னதாக கைத்தடி ராணுவ முகாமை தாங்கள் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருந்தனர்.யாழ்பாணத்திலிருந்து 5 கிமீ தொலைவில் கைத்தடி உள்ளது.
அதே நேரத்தில் பலாலி விமான தளத்தின் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தவிமான தளத்தின் மீது 6 முறை ஆர்ட்டிலரி குண்டுகள் வீசப்பட்டன. கொழும்புத்துறை, சாகவச்சேரி, தனன்கிளப்புஆகிய இடங்களில் கடும் மோதல் தொடர்ந்து வருகிறது.
Comments
Story first published: Thursday, May 18, 2000, 5:30 [IST]