தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மீண்டும் எழுகிறது கூர்க்காலாந்து கோரிக்கை
டார்ஜிலிங்:
கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று கூர்க்கா தேசியவிடுதலை முன்னணி அறவித்துள்ளது.
முன்னணியின் டார்ஜிலிங், குர்சியாங், காலிம்பாங்க் ஆகிய பிரிவுகளின் அவசரக் கூட்டத்தில் இதற்கான முடிவுமேற்கொள்ளப்பட்டது. ஜார்க்கண்ட், உத்தராஞ்சல், சட்டீஸ்கர் என மூன்று மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
ஆகவே, டார்ஜிலிங் மற்றும் அதை ஒட்டியப் பகுதிகளைச் சேர்ந்து கூர்க்காலாந்து என்ற மாநிலத்தையும் மத்தியஅரசு உருவாக்கவேண்டும் என்று கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.
இக் கோரிக்கையை வலியுறுத்தி முதற்கட்டமாக, மே 22-ம் தேதி டார்ஜிலிங்கில் 24 மணி நேர கடையடைப்புநடத்தப்படும் என்று முன்னணியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications