For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 2 பேர் சாவு

சிம்லா:

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா அருகே வியாழக்கிழமை இந்திய விமானப் படை ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக விழுந்ததில் ஒருவிங் கமாண்டரும், கேப்டனும் இறந்தனர்.

லஹால் ஸ்பித்தி மாவட்டம் பரலாச்சா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.

வியாழக்கிழமை காலை இரு ஹெலிகாப்டர்களும் கிளம்பிச் சென்றன. ஒரு ஹெலிகாப்டர் ஸ்டிங்கிரி என்ற இடத்தில் தரையிறங்கியது

மற்றொரு ஹெலிகாப்டர் பிரிகேடியர் பக்ஷி, கமாண்டர் புரேவால் ஆகியோருடன் மனாலி-உப்சி-லே சாலையைப் பார்ப்பதற்காக சென்றது. பரலாச்சாஎன்ற இடத்தில் 16,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வானிலையில் ஏற்பட்ட மாறுதலால் ஹெலிகாப்டர் எடை குறைந்து கீழேவிழுந்தது. இதில் பயணம் செய்த இருவரும் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பினர்.

ஹெலிகாப்டர் கீழே விழுந்த செய்தியறிந்த இரண்டாவது ஹெலிகாப்டர், அவர்களை மீட்கச் சென்றது. அப்போது அந்த ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கிக்கொண்டது. இதில் பயணித்த விமானியும், துணை விமானியும் இறந்தனர். மற்றொரு துணை விமானி காயங்களுடன் உயிர் தப்பினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X