தமிழகத்தில் இன்று
லண்டன்:
பலாலி விமானப் படைத் தளத்தில் புதன்கிழமை விடுதலைப் புலிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இலங்கை ராணுவத்தினருக்கு உணவுப் பொருள், ஆயுதம் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கு பலாலி விமானதளம்தான் பயன்படுத்தப்படுகிறது.
விடுதலைப் புலிகள் தரப்பில் வீசப்பட்ட நான்கு குண்டுகளில் ஒன்று மட்டுமே வெடித்ததாகவும், மற்ற மூன்று குண்டுகளால் விமான ஓடுதளத்திற்கு எந்தப்பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இலங்கை அரசு அதிகாரிகள தெரிவித்தனர்.
பலாலி விமான தளத்தின் தெற்குச் சுற்றுச் சுவர் பகுதியில் குண்டு வீசப்பட்டது என்று பிரிகேடியர் பலிதா பெர்னாண்டோ தொலைபேசியில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு சாலை வழியாக செல்லும் பாதையை விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பலாலி விமானதளம் மட்டுமே,யாழ்ப்பாண ராணுவத்தினருக்கு உயிர் நாடியாக விளங்குகிறது.இது சேதமடைந்தால், ராணுவத்தினர் பாடு மிகவும் சிக்கலாகி விட்டது.
இதற்கிடையே, கொழும்புத்துறையில் விடுதலைப் புலிகள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இறந்த புலிகளின் உடல்கள் சிதறிக் கிடந்ததாக அரசுப் பத்திரிகை தகவல் மையம் கூறியது. ராணுவத் தரப்பு சேதம்குறித்துத் தெரியவில்லை.
யாழ்ப்பாணம் வெறிச்சோடுகிறது:
இதற்கிடையே, யாழ்ப்பாணம் நகரிலுள்ள மக்களில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெறியேறி விட்டதால் நகரம் வெறிச்சோடி வருவதாக அங்குநிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகள், ராணுவத்திற்கு இடையிலான சண்டை உக்கிரமடைந்திருப்பதால் மக்கள் வெளியேற்றம் அதிகரித்து வருவதாகஅவர்கள் கூறியுள்ளனர்.