தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அண்ணன்-தங்கை உறவு மேம்பட 500 ஆடுகள் "பலி
கோயம்புத்தூர்:
கோவை அருகே அண்ணன், தங்கை உறவு பலப்பட வேண்டும் என்பதற்காக நடந்த கோவில் விழாவில் 500 ஆடுகள் வெட்டப்பட்டு பலிகொடுக்கப்பட்டன.
கோவை அருகே நரசிம்ம நாயக்கன் பாளையத்திற்கு அருகில் பூச்சியூர் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள வீரபத்திரசாமி, தொண்டம்மாள் கோவிலில்ஒவ்வொரு ஆண்டும் "கெடா வெட்டு என்ற விழா நடைபெறும்.
வழக்கம் போல இந்த ஆண்டு விழாவில் சுமார் 500 ஆடுகள் வெட்டப்பட்டன. குரும்பர் இன மக்கள், அண்ணன்-தங்கை உறவு மேம்பட வேண்டும்என்பதற்காக இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.
பலியிடப்பட்ட ஆடுகளை ஒவ்வொருவரும் தங்களது உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
இதில் கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குரும்பர் இன மக்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications