தமிழகத்தில் இன்று
1999-2000-ம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.79 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் துவக்கப்பட்டு 46 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச வருவாய் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சிறந்த நிர்வாகம், புதிய வர்த்தகக் கொள்கைகள், தொழில்நுட்பம் போன்ற காரணங்களால் நிறுவனத்தின் வருவாய்அதிகரித்தது என்று இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனில் பஜாஜ்தெரிவித்தார்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளாக லாபம் கிடைத்து வருகிறது. கடந்த10 ஆண்டுகளாக விமானக் கட்டணம் உயர்த்தப்படாத நிலையிலேயே லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் போக்குவரத்தில் புதிதாக 9 விமானங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதில் 5விமானங்கள் போயிங் ரகத்தையும், 4 விமானங்கள் ஏர்பஸ் வகையையும் சேர்ந்தவை. இது தொடர்பாக, விமானத்தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இன்ஜின் விநியோகிப்பாளர்களிடம் பேச்சு நடத்தப்படு வருகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மாற்றப்படும். 50 இருக்கைகள் கொண்டவிமானங்களை போக்குவரத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத்தனியார்மயமாக்கும் முடிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகளாவிய அளவில் விடப்பட்ட டெண்டரைஅடுத்து நிறுவனத்தை வாங்க 8 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்வுசெய்யப்படும்.
சமீபத்திய எரிபொருள் விலை உயர்வால் நிறுவனத்துக்கு மாதம் ரூ. 10 கோடி கூடுதலாகச் செலவாகிறது. இதனால்,கட்டண உயர்வு இருக்கும் என்று கூறமுடியாது. கட்டணத்தை உயர்த்துவதால் மட்டும் செலவைக் குறைக்கமுடியாது.கட்டண உயர்வால், பயணிகள் வரவு குறையவும் வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்கான புதிய விடுமுறை கால பயணத்திட்டங்களை இந்தியன் ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது என்றார் பஜாஜ்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications