தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கராச்சியில் முஸ்லீம் மதத்தலைவர் சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத்:
கராச்சியில் சன்னி பிரிவு முஸ்லீம் மதத் தலைவர் அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கராச்சியில் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருபவர் மவுலானா முகமது யூசுப். இவர் சன்னி பிரிவு முஸ்லீம் தலைவராகவும் இருக்கிறார். சம்பவத்தன்றுஇவரும் இவரது மகன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவர்கள் பயணம் செய்த காரை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுட்டுவிட்டுத் தப்பியது. இதில்,மெளலானா சம்பவ இடத்திலேயே இறந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர், மெளலானாவின் மகன் மற்றும் நண்பர் ஆகியோர் பலத்த காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் பதட்டம் நிலவுகிறது. போலீசார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications