பிந்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு
புது தில்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக வாரியத்தின்முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்தாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (ஷோ-காஸ் நோட்டீஸ்) அனுப்பவாரியத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும் வாரிய அதிகாரிகள் மீதும் கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துஆராய வாரியத்தின் செயற்குழு தில்லியில் கூடியது. கூட்டத்துக்கு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா தலைமைதாங்கினார்.
கூட்டத்தின் உணவு இடைவேளையின்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீதும் வாரிய அதிகாரிகள் மீதும் பிந்த்ரா பலவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளைக்கூறியுள்ளார். இது தொடர்பாக, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இம் முடிவை ஏற்றுக் கொள்வதாக பிந்த்ராவும் தெரிவித்துள்ளார்.
பிந்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பவது என்பது செயற்குழுவில் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவாகும். ஒரு வாரகாலத்தில் தான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி அந்த நோட்டீஸில் பிந்த்ரா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் என்றார் முத்தையா.
செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிந்த்ரா கூறியதாவது:
நான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐயிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்து இப்போது எதுவும்கூறமுடியாது. அவை ரகசிய ஆவணங்கள் என்பதால் அதுபற்றி வாரியத்திடமும் எதுவும் தெரிவிக்கவில்லை.
நான் வழங்கிய ஆவணங்களின் ரகசியத்தைக் காப்பாற்ற விரும்புவதால், சில விஷயங்கள் குறித்து கருத்து எதுவும்தெரிவிக்கும் நிலையில் நான் இல்லை என்றார் பிந்த்ரா.
யு.என்.ஐ.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications