For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
பெட்ரோல் விலை மீண்டும் உயரும்

புது தில்லி:

பெட்ரோலியப் பொருட்களின் விலை குறித்து மத்திய அரசு ஜூலையில் மறு பரிசீலனை செய்யும் என்று மத்தியபெட்ரோலியத் துறை இணை அமைச்சர் இ. பொன்னுசாமி தெரிவித்தார்.

புது தில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளின்உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மாற்றியமைப்பதாவேண்டாமா என்று ஜூலையில் மத்திய அரசு ஆராயும்.

அதற்கு முன்னதாக, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு மாற்றுமா, மாற்றாதா என்பதைஇப்போதைக்குக் கூறமுடியாது. சர்வதேசச் சந்தையில் தற்போது குரூட் எண்ணெய்யின் விலை நிலையாக உள்ளது.

தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை நகரங்களில் சமையல் எரிவாயு இணைப்பு கேட்டு பதிவு செய்துகாத்திருப்போர் பட்டியலில் இருந்த அனைவருக்கும் ஏப்ரல் மாதம் இணைப்பு தரப்பட்டுவிட்டது. நாட்டின் மற்றநகரங்களில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இணைப்பு தர நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயற்கை எரிவாயு வளம் நாளொன்றுக்கு 40 லட்சம் கியூபிக் மீட்டர் என்ற அளவில் உள்ளது.தற்போது 20 லட்சம் கியூபிக் மீட்டர் எரிவாயு தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பொரேஷனில் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் 95லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும். இதற்காக, ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொச்சி-கோவை-கரூர் இடையேயான 300 கிலோமீட்டர் நீள பைப்லைன் திட்டம் இந்த ஆண்டு டிசம்பரில்துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கும் மதுரைக்கும் இடையே பைப்லைன் அமைக்கும் பணியைமேற்கொள்ள பெட்ரோனெட் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றார்பொன்னுசாமி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X