தமிழகத்தில் இன்று
சென்னை:
உலகளவில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பேசும் கமயூனிஸ்ட்கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சரியான நிலை எடுக்கவில்லை என்று புதியதமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் வெள்ளியன்று அவர் அளித்த பேட்டி:
ராஜீவ் படுகொலையை மட்டும் எடுத்துக் கொண்டு இலங்கையில் நடக்கும் 50 ஆண்டுஇனப் படுகொலைக்கு இந்தியா தலையிடக்கூடாது என்று கூறுவது நியாயமற்றது.
இலங்கையில் நடப்பது மக்கள் யுத்தம். அதற்கு புலிகள் தலைமைவகித்துள்ளனர்.அவர்களுக்கு உதவாமல் எப்படி இலங்கைத் தமிழர்களுக்குஉதவமுடியும்.
இந்திய ராணுவத்தை அனுப்ப மாட்டேன் என்ற மத்திய அரசின் முடிவைவரவேற்கிறோம். ஆனால் மனிதாபிமான உதவிகள் என்பது சந்தேகத்தைஏற்படுத்துகிறது.
இலங்கையில் ராணுவம் தமிழர்களை கொன்று குவித்தபோது, இந்திய உதவியைஇலங்கை கேட்கவில்லை. ஆனால், இப்போது கேட்கிறது. எனவே, கொடுக்கக்கூடாது.தமிழர்களுக்கு உதவ வேண்டும்.
இதை வலியுறுத்தி சென்னையில் 20ம் தேதி மே தின பூங்காவில் இருந்து இலங்கைதூதரகம் வரை பேரணி நடத்துகிறோம் என்றார்.