தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
காங்கேசன்துறை துறைமுகம் மீது புலிகள் குண்டு வீச்சு

லண்டன்:

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகம் மீது விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை குண்டுவீச்சு நடத்தினர்.

இலங்கையின் வடபகுதியில் யாழ்பாணத்துக்கு அடுத்து பெரிய மற்றும் முக்கிய துறைமுகமாக காங்கேசன்துறைதுறைமுகம் உள்ளது. யாழ்ப்பாண தீபகற்பத்தில் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள்,இலங்கை ராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தாக்குதலின் முக்கிய கட்டமாக காங்கேசன்துறை துறைமுகம்மீது அவர்கள் வெள்ளிக்கிழமை குண்டு வீசினர். இத்தகவலை, இலங்கை ராணுவம் உறுதி செய்துள்ளது. துறைமுகம் மீது சில குண்டுகளை புலிகள் வீசியதாக ராணுவஅதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை ராணுவம் வசம் உள்ள பலாலி விமான தளத்துக்கு 5 கிலோமீட்டர் தூரத்தில்தான் காங்கேசன்துறைதுறைமுகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் தாக்குதலால் துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லைஎன்று ராணுவம் தெரிவித்துள்ளனர்.

பலாலி விமான தளம் மீதும் கடந்த இரு நாட்களாக புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத் தாக்குதலால்விமான ஓடுபாதைக்கும், ராணுவ தளத்துக்கும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+