தமிழகத்தில் இன்று
லண்டன்:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டு வரும் ராணுவத்தினருக்கு இலங்கை அரசு புதிதாகவாங்கியுள்ள நவீன ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது.
வியாழக்கிழமை பலாலி விமான தளத்தில் விடுதலைப் புலிகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். வடக்குப்பகுதியில் உள்ள ஒரே விமான தளம் இது மட்டுமே. இந்த விமான தளம் சேதமடைந்தால் யாழ்ப்பாணத்திலுள்ளராணுவத்தினருக்கு உணவு மற்றும் ஆயுத விநியோகம் பாதிக்கப்படும். எனவே புலிகள் புதிய தாக்குதலைத் தடுக்கபுதிதாக வாங்கப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை அரசு அனுப்பி வைத்துள்ளது.
ஆயுதங்கள், பலாலி விமான தளத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது என்று அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யானை இறவு முகாமை விடுதலைப் புலிகள் பிடித்த நானில் இருந்தே நவீனஆயுதங்களை வாங்கும் நடவடிக்கையை இலங்கை அரசு துவங்கியது. நவீன ஆயுதங்கள் எவை என்பது குறித்துஅரசுத் தரப்பில் விளக்கம் இல்லை. இருப்பினும் விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரும் என்று மட்டும்தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள ராணுவத்தினருக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் அனைத்தும் பலாலியில்தான் இருப்புவைக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களும் இங்கிருந்துதான் செல்கின்றன.
பலாலி விமானதள கண்காணிப்புக் கோபுரம் சேதம்:
இதற்கிடையே, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பலாலி விமான தளத்தில் விடுதலைப் புலிகள் நடத்தியகுண்டுவீச்சில், விமான தளம் பாதிக்கப்படவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் விமானதளத்திலுள்ள முக்கிய கண்காணிப்புக் கோபுரம் தரைமட்டமானதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறியதாக புலிகளின்வானொலி கூறியது.
பலாலிக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவை வழக்கம்போல சென்று கொண்டிருப்பதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
யாழப்பாணம் செல்லும் சாலையை விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். விமானம்அல்லது கப்பல் மூலமாக மட்டுமே ராணுவத்தினருக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications