For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
இந்தியா-வில் போலி-யோ-வை ஒழிக்-க உலக வங்கி கடன்உத-வி
புது தில்லி:
இந்தியாவில் மேற்கொள்ளப்படவுள்ள 4 பெரிய திட்டங்களுக்கு உலக வங்கி மொத்தம் ரூ. 2150 கோடி கடனுதவிஅளித்துள்ளது.
இது தொடர்பாக 4 ஒப்பந்தங்களிலும் உலக வங்கியின் நிதிப் பிரிவுத் தலைவர் எட்வின் லிம் வியாழக்கிழமைகையெழுத்திட்டுள்ளதாக உலக வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
உத்திரப் பிரதேசத்தில் மின்துறையை மறுசீரமைக்க ரூ.645 கோடியும், 8 மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்துமற்றும் போலியோ தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.640 கோடியும், ராஜஸ்தானின் வறுமை ஒழிப்புநடவடிக்கைகளுக்கு ரூ. 430 கோடியும், உத்திரப் பிரதேசத்தில் வளர்ச்சி மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு ரூ. 435கோடியும் செலவிடப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
Story first published: Friday, May 19, 2000, 5:30 [IST]