தமிழகத்தில் இன்று
கடைக்-கு வந்-த பெண்- சித்--ர-வ-தை: சர-வ-ணா ஸ்டோர்ஸ் மீ-து போலீஸ் நட-வ-டிக்-கை
சென்னை:
ஜவுளி எடுக்க வந்த ஒ-ரு பெண் திருடி விட்டதாக கூறி 4 மணி நேரம் கடையில் வைத்துசித்ரவதை செய்ததாக சென்-னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் உட்படஊழியர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.
தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபலமான துணிக்கடையான சரவணா ஸ்டோர்சில்பெண் ஒருவர் துணி வாங்க வந்துள்ளார். அப்பெண் திருடி விட்டதாக கூறி அப்பெண்ணை கடையில் வைத்து விசாரித்துள்ளனர்.
இரவு வரை அப் பெண்ணை விடாமல் விசாரித்தாக கூறப்படுகிறது.
இது குறித்து அப் பெண் போலீசில் புகார் செய்தார்.தான் திருடவில்லை என்றும் திருடிவிட்டதாக கூறி என்னை நான்கு மணி நேரம் சித்ரவதை செய்தனர் என்றும் புகார்கூறினார். இதைடுத்து கடை ஊழியர் மூவரை போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து கடை உரிமையாளர் தலைமையில் கடை ஊழியர்கள் எலல்லாரும்போலீஸ் நிலையம் சென்று வாதிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் ஏற்படவே,போலீசார் எச்சரித்து அனுப்பினர். பின்னர் போலீசார் கடை உரிமையாளர்செல்வரத்தினம் உள்பட ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதை எதிர்த்து ரங்கநாதன் தெருவில் உள்ள வியாபாரிகள் கடை அடைப்பு செய்தனர்.