தமிழகத்தில் இன்று
சென்னை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரும், கேரளமுதல்வரும் டெல்லியில் நடத்திய பேச்சுவார்த்தையில் நிபுணர் கமிட்டிஅமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வெறும் கண்துடைப்பே என்றுத.மா.கா. கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து த.மா.கா. துனைத்தலைவர்கள் எஸ்,ஜி.விநாயக மூர்த்தி., கே.பாரமலை,பொருளாளர் டி.சுதர்சனம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை முதல் கட்டமாக 145 அடியாகவும்,பின்னால் பேபி அணையை பலப்படுத்திய பிறகு உயரத்தை 152 அடியாகவும் உயர்த்தவேண்டும் என்று நெடுங்காலமாக பெரியாறு அணை பாசன் விவசாயிகள் கோரிவருகின்றனர்.
இதன் தொடர்பாக தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக பல முயற்சிகள் எடுத்த பிறகும்கேரள அரிசின் பிடிவாதமான போக்கினால் பெரியாறு அணை பிரச்சனையில் எந்தஉடன்பாடும் ஏற்பட இயலாது போயிற்று.
இந்நிலையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரின் முன்னிலையில் டெல்லியில்தமிழக- கேரள முதல்வர்கள் பேச்சு நடத்தி ஒரு நிபுணர் கமிட்டி அமைக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் கமிட்டியின் அறிக்கை வெளிவருவதற்கானகால வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது முக்கியமான குறைபாடு.இதனால் பெரியாறு அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுடைய துயரம்அதிகரிக்குமே தவிர குறைவதற்கான வாய்ப்பு இல்லை.
மேலும் நிபுனர் குழு அறிக்கையை ஏற்க வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் இந்தஉடன்பாட்டில் இல்லை. நிபுணர் குழு அறிக்கையை மத்திய அரசு பெற்றுக்கொண்டு,அது பற்றியஆணை பிற்ப்பிக்கப்படும் என்றே கூறப்படுகின்றன.இவ்வகையில் விவசாயிகள் நம்பிக்கை பெறுகிற வகையில் இந்த அறிவிப்பு இல்லை.
இந்நிலையில் தமிழகத்தின் கோரிக்கையில் உள்ள நியாயங்களை தமிழக அரசுவலியுறுத்தி காலகெடுவுடன் கூடிய தீர்வுக்கு வழி காணப்படவில்லை என்பதால்நிபுணர் குழு பற்றிய அறிவிப்பு வெறும் கண்துடைப்பாகவே தோன்றுகிறது.விவசாயிகளுக்குப் பாதகமான முறையில் தீர்வு எட்டப்பட்டாலோ சம்பந்தப்பட்டபகுதி விவசாயிகளுக்குக்காக போராடத் தயங்காது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications