கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
அகர்தலா:
திரிபுராவில் என்எல்எஃப்டி தீவிரவாதிகளின் கண்மூடித்தனமான தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இத்துடன் திரிபுராவில் ஏற்பட்ட வன்முறையில்மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
திரிபுராவில் வெள்ளிக்கிழமை இரவு பள்ளிக்கூடம் ஒன்றில் இருந்த அகதிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 15பேர் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். 10 பேர் படுகாயமடைந்தார்கள்.
இந்தத் தாக்குதல் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடந்தது. மொத்தம் 45 பேர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கலவரம் நடந்த இடங்களில்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தில் ஈடுபடுகிறவர்களைக் கண்டதும் சுட போலீசாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
டெலிமுரா, கல்யாண்புரா, கோவாய் பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
புறராணுவப் படையினர் சம்பவ இடத்தில் தீவிரமாய்க் கண்காணித்து வருகின்றனர். இந்தத் தாக்குதலில் 100 குடிசைகள் சேதமடைந்தன. 10, 000 க்கும்மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications