தமிழகத்தில் இன்று
சென்-னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில் நுட்ப மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று தமாகா கேட்டுக்கொண்டுள்ளது.
கணினி மற்றும் இணையத் தளம் (இன்டர்நெட்) தொடர்பான பணிகளை வரை-முறைப்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மத்திய அரசுகொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா -நாடாளுமன்றத்தில் -நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று தமாகா வலியுறுத்தி வருகிறது. இச்சட்டம் மிகக் கொடுமையான சட்டம்.வாரன்ட் இல்லாமல் எந்த இடத்தையும் சோதனையிடுவதற்கு போலீஸ் டி.எஸ்.பி. லெவலுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் கொடுமையானது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அதிகா-ரிகள் சுயநிலத்தோடு செயல்பட துவங்குவார்கள்.
இதற்கு முன்பிருந்த சாதாரண சட்டத்தில் வாரன்ட் பெற்றுத் தான் சோதனையிட வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதை மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.இதன் -மூலம் ஜன-நாயகத்தையே கூண்டில் ஏற்றும் -முயற்சி -நடந்துள்ளது.
இதனால் இச்சட்டத்தை ஜனாதிபதி அங்கீகரிக்கக் கூடாது என்று தமாகாவின் அறிவியல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமெ-ரிக்கா -நாராயணன்தெ-ரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications