For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

முல்--லப் பெரி-யா-று: போராட்-டம் நடத்-த காங், த.மா.கா மு-டி-வு

சென்னை:

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கூட்டுப் போராட்டம் நடத்த த.மா.கா, காங்கிரஸ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.இப்பிரச்சனை தொடர்பாக இதுவரை இரு தரப்பிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.

தமிழகம்-கேரளா எல்லையில் உள்ள இந்த அணையின் நீர் மட்டத்தை 135 அடியில் இருந்து 152 அடியாக உ.யர்த்த வேண்டும் என்று தமிழகம்வலியுறுத்துகிறது. கேரளா இதற்கு உடன்பட மறுக்கிறது.

குறைந்தபட்சம் 145 அடியாவது உயர்த்த வேண்டும் என்று தமிழகம் மன்றாடி வருகிறது. அதற்கும் உடன்படாத கேரள அரசுக்கும், தமிழகஅரசுக்கும் இடையே டெல்லியில் 19ம் தேதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

மத்திய நீர் பாசனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பேச்சு வார்த்தையில், நிபணர்குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இம்முடிவை இருமாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டன. ஆனால், நிபுணர் குழு வெறும் கண்துடைப்பு என்று த.மா.கா கண்டனம் தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை முன் வைத்து காங்கிரசும், த.மா.கா வும் கூட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பைபுதன்கிழமையன்று மூப்பனாரும், தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்தியும் கூட்டாக வெளியிடுகின்றனர். இதற்காக புதன்கிழமைசத்தியமூர்த்தி பவனுக்கு திண்டிவனம் ராமமூர்த்தி வருகிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவர் சத்தியமூர்த்தி பவன் (த.மா.கா. அலுவலகம்) வருவது இதுவே முதன் முறை.மூப்பனாரிடமிருந்து சத்தியமூர்த்தி பவனை மீட்போம் என்று பேசி வந்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

த.மா.கா. காங்கிரஸ் கூட்டு போராட்ட முடிவை அ.தி.மு.க. ஆதரிக்குமா என்ற கேள்விக்கும் புதன்கிழமை அவர்கள் விடை அளிக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X