தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பிரதமர் வாஜ்பாய் தலையிட வரதராஜப் பெருமாள் கோரிக்கை

சென்னை:

இலங்கைப் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு தக்க தீர்வு காணவேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) தலைவர் ஏ. வரதராஜப் பெருமாள் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம் பகுதியில் புலிகளின் கை ஓங்கிவருவதால், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மீண்டும் புலிகளின் வசம் வந்தால் அப் பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். புலிகளின் தற்போதைய நடவடிக்கையால்யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் தமிழர்கள் வலுக்கட்டாயமாக வேறு இடங்களுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியப் பிரதமர் வாஜ்பாய் முயற்சி எடுக்கவேண்டும். இப் பிரச்சினையில் வாஜ்பாய் தலையிட்டுநிரந்தரமான அரசியல் தீர்வு காண முயற்சிக்கவேண்டும் என்றார் வரதராஜப் பெருமாள்.

யு.என்.ஐ..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+