தமிழகத்தில் இன்று
தங்கம் வாங்குவதில் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்தியாவில் தங்கத்திற்கு அதிக அளவு தேவை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில் டெல்லி, மும்பை, கல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களிலும் தங்கம் வாங்கியவர்கள் கடந்த வருடத்தை விடஅதிகம்.
தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்த அதே வேகத்தில் சரிவும் ஏற்பட்டது. விலை உயர்ந்த நிலையில் -வாங்-கத் தயங்கிய நுகர்வோர், விலை குறைந்தபோது ஏகத்துக்கும் தங்கத்தை வாங்கிக் குவித்ததில் தற்போது தங்-கத்-திற்-கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இத-னால் தேவை அதி-க-ரித்-துவிட்-ட-து.
உல-க தங்-க கவுன்சில் நடத்திய சர்வேயின்படி 2000-மாவது ஆண்டின் தொடக்கத்திலேயே 795.2 டன் பற்றாக்குறை ஏற்பட்-டுள்-ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலை வளர்ச்சி, பங்குசந்தை, சாப்ட்வேர் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் பொருளாதாரத்தில் அனைத்துத் தரப்பினரும்முன்னேறி வருகின்றனர். அவர்கள் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களிலேயே முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கம் வாங்குபவர்கள்நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள். இதனால் பற்றாக்குறை ஏற்படுவது இயற்கை என்று அந்த சர்வே கூறுகிறது.
கவுன்சிலின் இயக்குநர் டெரிக் மெக்கேடா கூறுகையில், இந்தியாவில் தங்கத்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறை இந்திய பொருளாதாரம்வளர்ச்சியடைந்துள்ளதையே காட்டுகிறது. கிராமங்களில் விவசாயம் செய்பவர்கள் கூட அதிக அளவு வருமானம் பெறுகிறார்கள். அவர்களதுபொருளாதார நிலையும் மிகவும் செழிப்பாய் உள்ளது. அவர்களும் தங்கத்திலேயே முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதனால் தங்கத்திற்கு இந்தியாவில்பெருமளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த வருடம் பற்றாக்குறையைச் சமாளிக்க 135.2 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது கடந்த வருடத்தை விட 3 சதவீதம் அதிகம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications