தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்கை ராணுவ வீரர்களை மீட்க இந்தியா முடிவு

டெல்லி:

யாழ்ப்-பா-ணத்-தில் சிக்-கி-யுள்-ள இலங்-கை ரா-ணு-வ வீரர்-க-ளை விமா--னம் மூலம் மீட்-க இந்-தி-யா மு-டி-வு செய்-துள்ள-து.

இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாண தீபகற்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த சுமார் 30 ஆயிரம் இலங்கை ராணுவத்தினரை புலிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால், இலங்கை ராணுவத்தினர் வெளியேற முடியாமல் உள்ளனர். இவர்களை மீட்க உதவி அளிக்கும்படி இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியது. இதுதொடர்பாக, டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை குறித்துமத்திய அமைச்சரவை ஆலோசனை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைச்சரவைக் கூட்டம் உடனே நடைபெற்றது.

அதில், இலங்கைக்கு ராணுவ ரீதியில் உதவி அளிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ள போதிலும், புலிகளின் முற்றுகையில் உள்ள ராணுவத்தினரை வான் வழியேமீட்க உதவி செய்யலாம் என்று அக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடவுள்ளது.

இத் தகவலை, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா நிருபர்களிடம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+