தமிழகத்தில் இன்று
ஜம்மு:
ஜம்முவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடர் கிரானைட் வெடிகுண்டு வெடித்ததில் மூன்று ராணுவ வீரர்கள் 18 தீவிரவாதிகள் உள்பட 26 பேர்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து டிஐஜி அசோக் பான் கூறியதாவது:
ஜம்முவில் பாட்டமாலு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு சக்திவாய்ந்த கிரானைட் வெடிகுண்டு வெடித்தது.
திடீரென்று ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பை எதிர்பார்க்காத ராணுவ வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஆங்காங்கே பதுங்குகுழிகளில் பதுங்கியிருந்த 18 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் இந்தச் சம்பவத்தில் மாண்டனர்.
இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இறந்த மேலும் 5 பேர் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
இதையடுத்து ராணுவவீரர்கள் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னணி யாராக இருக்கக் கூடும் என்ற ரீதியில் எல்லா இடங்களிலும் தேடுதல்வேட்டையில் ஈடுபட்டனர். வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் ஐந்து தீவிரவாதிகள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்கள், ராக்கெட் வீச்சுகள், மற்றும் ஏகே 47 ரகதுப்பாக்கிகள், கண்ணிவெடிகள், சில பத்திரிக்கைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக்குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜம்முவில், பூஞ்ச், தோடா, பாரமுல்லா மாவட்டங்களில் ராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications