For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இலங்கை அமைதிக்குத் தடையாக இருப்பது புலிகள் தான் - அமைச்சர் கதிர்காமர்

கொழும்பு:

இலங்கையில் அமைதி ஏற்-ப-டத் தடையாக இருப்பது விடுதலைப் புலிகள் தான் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர்தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, யாழ்ப்பாண தீபகற்பத்தில் கடும் சண்டை நடந்து வருகிறது. இலங்கைப் பிரச்சினைக்குத்தீர்வுகாண மத்தியஸ்தம் செய்ய நார்வே நாட்டின் உயர் மட்டக் குழு இலங்கை வந்துள்ளது.

இந் நிலையில், இலங்கை அமைதிக்குத் தடையாக இருப்பது புலிகள் தான் என்ற கருத்தை கதிர்காமர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை பத்திரிகைக்குஅவர் அளித்த பேட்டி:

இலங்கையில் அமைதி ஏற்பட அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புலிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராகவே உள்ளது. ஆனால்,பேச்சுவார்த்தைக்குப் புலிகள் தயாராக இல்லை. எப்போது அழைப்பு விடுத்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

போராடிவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒரே எண்ணம் தனி நாடுதான். அதற்குத் தான் தற்போது அவர் போராடி வருகிறார். அதனால்தான்இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த பிரபாகரன் முன் வரவில்லை. ஆனால், இலங்கை ராணுவத்தை திசை திருப்பவதற்காக, பல முறைபோர்நிறுத்தம் அறிவித்ததோடு அரசுடன் பேச்சு நடத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால், ஒருபோதும் அவற்றை செயல்படுபத்தவில்லை. புலிகளின்நடவடிக்கைகளால் நாங்கள் பலமுறை பலத்த நஷ்டத்தைச் சந்தித்துவிட்டோம்.

இலங்கைக்கு நார்வே நாட்டின் உயர்மட்டக் குழு வந்துள்ளது. அவர்கள் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வதுஎன்பதை ஆராய்ந்து கருத்து தெரிவிக்கவே இலங்கை வந்துள்ளனர். புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் மத்தியஸ்தம் செய்ய வரவில்லை.

இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இதை இலங்கை வரவேற்கிறது. எந்த வகையில் இந்தியாவின் உதவியை ஏற்றுக்கொள்வது என்று ஆராய்ந்து வருகிறோம் என்றார் கதிர்காமர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X