தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழக தலைவர்கள் புலிகளை வளர்த்து விடுகிறார்கள்: மூப்பனார்
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் உள்ளவர்கள் விடுதலைப் புலிகளை வளர்த்து விடுகிறார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேரோட்டத்தில் கலந்துகொள்ள வந்த மூப்பனார் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
கேள்வி: அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
பதில்: திமுக தலைவர் கருணாநிதி கூட அவ்வாறுதான் கூறியுள்ளார். இதுகுறித்து தேர்தல் சமயத்தில் ஆலோசிப்போம்.
கேள்வி: பா.ம.க. உடன் த.மா.கா. இணைந்து 3-வது அணி அமைக்கப் போவதாக கூறப்படுகிறதே?
பதில்: அது வெறும் வதந்தி.
கேள்வி: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இருப்பதாக நினைக்கிறீர்களா?
பதில்: தமிழகத்தில் உள்ளவர்கள் விடுதலைப்புலிகளை வளர்த்து விடுகிறார்கள் என்றார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications