For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
மூலிகைப் பெட்ரோல் வழக்கு: ராமர்பிள்ளை தாயார் மீதும் குற்றப்பத்திரிக்கை
சென்னை:
மூலிகைப்பெட்ரோல் விஞ்ஞானி என்று கூறிக்கொண்டு பென்சீன், டொலுவீன் என்ற ரசாயனத் திரவப் பொருட்கள்கலந்து கலப்படப் பெட்ரோல் தயாரித்தது தொடர்பாக சிபிஐயால் கைது செய்யப்பட்டவர் ராமர் பிள்ளை.
ஜெயிலில் இருந்த ராமர்பிள்ளை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்பொழுது சென்னை சாஸ்த்ரிபவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி ராமர் பிள்ளை தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.
ராமர்பிள்ளை மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ போலீசார் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.சிபிஐ இணை இயக்குநர் டி.முகர்ஜி தலைமையில் இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்த நிலையில், குற்றப்பத்திரிக்கையில் ராமர்பிள்ளையின் வளர்ப்பு தாயார் வேணுதேவி முக்கிய குற்றவாளியாகசேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
Comments
Story first published: Tuesday, May 23, 2000, 5:30 [IST]