For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
பதவிக்காக எதையும் செய்யும் பா.ஜ.க.: சோனியா காந்தி

மேல்கயான் (மகாராஷ்டிரா)

அதிகாரத்தில் இருப்பதற்காக எந்த அளவிற்கும் செல்ல பாரதீய ஜனதாக் கட்சி தயங்காது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மேல்கயான் என்ற இடத்தில் ஈத்கா மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நாட்டை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள் செய்ய தவறிவிட்டது. பாரதியஜனதாக்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்தும் ஆட்சியில் பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லை.

இந்த அரசு ஒரு மக்கள் விரோத அரசு. அவர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் சுகத்தை மட்டுமே விரும்புபவர்கள். அதற்காக எந்த அளவிற்கும்போவார்கள்.

விவசாயிகள், ஏழைஎளிய மக்கள், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியவர்களின் நலனிற்காக திட்டங்கள் எதையும் இந்த அரசுஅமல்படுத்தவில்லை. அவர்களின் பொருளாதார மேம்பாடு குறித்து இந்த அரசு கண்டுகொள்வதில்லை. அடுத்த ஆட்சியில் மக்கள் அவர்களுக்கு நல்லபாடம் கற்பிப்பார்கள்.

எனது மாமியார் இந்திராகாந்தி, கணவர் ராஜீவ்காந்தி ஆகியோர் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பல சலுகைகள் வழங்கியவர்கள். அவர்கள் செய்தபல்வேறு நலத்திட்டங்களை மக்கள் இன்னும் மறந்திருக்க முடியாது. ஆனால் இந்த அரசிலோ வேலைவாய்ப்புப் பிரச்சனைகள் நாள்தோறும் அதிகரித்துவருகிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் பாரதிய ஜனதாக் கட்சியினர் செய்யத் தவறிய நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம். சமுதாயத்தில்நலிந்தோருக்காகப் பாடுபடுவோம். தலித், ஆதரவற்றோர், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோர்கள் ஆகியவர்களை உயர்த்துவதே எங்கள் கட்சியின்குறிக்கோளாகும் என்றார்.

கூட்ட முடிவில் சோனியாகாந்தி பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி அங்கே கூடியிருந்த தலித் இன மக்களை சந்தித்துப் பேசினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X