For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிகழ் காலத்தில் நில்!

By Staff
Google Oneindia Tamil News
அதி-மு-க முன்-னாள் அமைச்-ச-ருக்-கு ஆத-ர-வா-க சாட்-சி-ய-ம-ளித்-த தி-மு-க-வி-னர்

சென்னை:

அதிமு-க முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி மீது அரசு தொடர்ந்துள்ள ஊழல் வழக்கில் அவருக்கு ஆதரவாக தி-முக பிரகர்கள் சாட்சியம் அளித்தனர்.

அதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர் பேராசி-ரியர் பொன்னுசாமி. இவர் மீதும், இவரது குடும்பத்தினர் மீதும் வருவாய்க்கு அதிகமாக ஆட்சிக்காலத்தில் சொத்து சேர்த்ததாக தி-முக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு இரண்டாவது தனி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நீதிபதி ராதாகிருஷ்ணன் சாட்சிகளை விசாரித்து வருகிறார்.

புதன்கிழமை நடைபெற்ற சாட்சி விசாரணையில் பொன்னுசாமிக்கு ஆதரவாக தி-முக பிரகர்கள், காங்கிரஸ், ராஜீவ் காங்கிரஸ் பிரகர்கள் சாட்சியம்அளித்தனர். திருச்சி அருகே -நடுப்பட்டி தி-முக கிளைச் செயலாளர் --முருகேசன், தி-முக பிரதிநதி சந்திரசேகரன், ராஜீவ் காங்கிரஸ் மா-நில இணை செயலாளர்-நாகராஜன், மணப்பாறை காங்கிரஸ் பிர-முகர் -முத்து, மருங்காபு-ரி காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் -முருகையா, திருச்சி ராஜீவ் காங்கிரஸ் தலைவர் கணபதிஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

பொன்னுசாமியின் சகோதரர் வெங்கடேசனிடம் இருந்து தாங்கள் 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கடன் வாங்கியதாக அவர்கள் சாட்சியம் அளித்தனர்.அதாவது ஆட்சிக்காலத்தில் வருவாய்க்கு அதிகமாக 73 லட்ச ரூபாய்க்கு சொத்து வாங்கி குவித்ததாக பொன்னுசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதுவழக்கு.

அந்த வழக்கில் பொன்னுசாமி தரப்பில் ஏற்கனவே தமக்கு -நிறைய சொத்துக்கள் உள்ளதாகவும், ஏற்கனவே பணம் கொடுக்கல், வாங்கல்தொழில் செய்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன் மூலம் கிடைத்த வருவாயில் தான் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டன என்று வாதாடிவருகின்றனர்.

அதற்கு ஆதரவாக இவர்கள் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாட்சியத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி ராதாகிருஷ்ணன் வழக்கை அடுத்தமாதம் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X