தமிழகத்தில் இன்று
மும்பை:
லண்டனில் சனிக்கிழமை இறந்த தொழிலதிபர் எஸ்.பி.கோத்ரெஜின் உடல் விமானம் மூலம் புதன்கிழமை மும்பை கொண்டு வரப்பட்டது.
மும்பை வந்த உடல் பின்னர், விக்ரோலி என்ற இடத்திலுள்ள கோத்ரெஜ் நகரியத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு அங்கு இறுதி அஞ்சலிசெலுத்தப்பட்டது. நிகழ்ச்சியின்போது, உறவினர்கள் ஆதி கோத்ரெஜ், ஜாம்ஷெட் கோத்ரெஜ் ஆகியோர் இருந்தனர்.
இறுதி அஞ்சலிக்குப் பிறகு தெற்கு மும்பையில் உள்ள கெம்ப் கார்னர் பகுதியிலுள்ள "டவர் ஆப் சைலன்ஸ் என்ற இடத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர் கோத்ரெஜ். பார்சி இனத்தவர்கள், இறந்தவர்களின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ மாட்டார்கள். மாறாக "டவர்ஆப் சைலன்ஸ் எனப்படும் குன்றில் உடலை விட்டு விடுவார்கள்.
இங்-கு அந்-த உட-லை க-ழு-கு-க-ளும், காக்-கை-க-ளும் உண்-ணும். தங்--க-ள--து உட-ல் கூட பிரா-ண-க-ளுக்-கு உண-வா-க வே-ண்-டும்என்-ப-தற்-கா-கத் தான் இந்-த மு-றை--யை பார்-சி-கள் கடை-பி-டித்-து வ-ரு-கின்-ற-னர்.