தமிழகத்தில் இன்று
தி-ரு-வண்-ணா-ம-லை அ-ரு--க விஷச் -சா-ரா-யம் கு-டித்-த 11 பேர் சா-வு
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் விஷம் கலந்த சாராயம் குடித்த 11 பேர் ப-ரிதாபமாக இறந்தனர்.
இறந்தவர்களில் ஒருவர் பெண். மேலும் 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவை சேர்ந்த கிராமங்கள் வடுகம்பட்டு. இக்கிராமத்தில் கள்ளச் சாராயக்கோஷ்டிகளுக்கு இடையில் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோதல் காரணமாக ஒரு கோஷ்டியினர் விற்பனைக்காக காய்ச்சி வைத்திருந்த கள்ளச் சாராயத்தில் இன்னொரு கோஷ்டிபூச்சிமருந்தை கலந்து விட்டதாக கூறப்படுகிறது.
பூச்சிமருந்து கலந்த கள்ளச்சாராயத்தை குடித்தவர்கள் சம்பவ இடத்திலேயே 6 பேர் இறந்தனர். 33 பேர் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 5 பேர் இறந்து விட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு கள்ளச்சாராய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராய விற்பனையை தடுக்காத 7 போலீசார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.