தமிழகத்தில் இன்று
இஸ்லாமாபாத்:
அணு குண்டு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளாக வந்துள்ள செய்திகளில் உண்மையில்லை. அப்படி ஒரு எண்ணம் பாகிஸ்தானிடம் இல்லை என பாகிஸ்தான்மறுத்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாள் இப்திகார் முர்ஷெட் கூறுகையில், பாகிஸ்தான் மீண்டும் அணு குண்டு வெடித்து சோதனை செய்து பார்க்கப்போவதாக அமெரிக்க பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை.
அடிப்படையில்லாத தகவல்களைக் கொண்டது இந்த செய்தி. அணு குண்டு வெடிப்பதில்லை என்று பாகிஸ்தான் சுய கட்டுப்பாடு விதித்துக் கொண்டுள்ளது. எனவேஇந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
முன்னதாக, வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் மீண்டும் அணு குண்டு வெடித்துப் பார்க்கப் போவதாகஎங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் அது விரைவில் இருக்காது என்று நினைக்கிறோம் என்றனர்