தமிழகத்தில் இன்று
மதுரை:
தமிழ்நாட்டில் மதுரை அருகே நடந்த இரண்டு விபத்துக்களில் 8 பேர் இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த இரு விபத்துக்கள் குறித்த விபரமாவது:
பஸ்சும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
மதுரை - அருப்புக்கோட்டை தேசியநெடுஞ்சாலையில் எலியார்பட்டி பகுதியில் இவ்விபத்து செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது.
போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் சங்கர் ஜிவால் இதுகுறித்துக் கூறுகையில், ஆட்டோ 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த போது எதிரே எமனைப்போல் வந்த பஸ் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் ஆட்டோ டிரைவரும் உயிரிழந்தார் என்றார்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் சலபதி பகுதியில் வேனும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 2 பேர் இறந்தனர். ஒருவர்படுகாயமடைந்தார். காயமடைந்த லாரி டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.