For Daily Alerts
Just In
நிகழ் காலத்தில் நில்!
டாடா இண்டிகா காருக்கு தேசிய விருது
சென்னை:
இந்தியாவுக்காக, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டாடா இண்டிகா காருக்கு இந்திய தேசிய தொழில் நுட்ப விருது கிடைத்துள்ளது.
டாடா இண்டிகா கார், டாடா நிறுவனத்தின் தயாரிப்பு. இதுவரை 55 ஆயிரம் கார்கள் விற்பனை ஆகியுள்ளது. தற்போது இந்தக் காருக்கு இந்திய தேசியதொழில்நுட்ப விருது கிடைத்துள்ளது.
பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய அந்த விருதை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி வழங்கினார்.
டாடா நிறுவன நிர்வாக இயக்குநர் எப்.கே. கரா-னா, விருதைப் பெற்றுக் கொண்டார். கடந்த ஆறு மாதங்களில் டாடா நிறுவனம் பெறும் 2-வதுவிருது ஆகும்.
Comments
Story first published: Wednesday, May 24, 2000, 5:30 [IST]