தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப கி.வீரமணி எதிர்ப்-பு

தர்மபுரி:

இலங்கைப் பிரச்சினையில் சமூகத் தீர்வு காண இந்தியா விரும்பினால், இலங்கை அரசையும், போராட்டம் நடத்துபவர்களையும் அழைத்துப் பேச வேண்டும்.மாறாக ராணுவத்தை அனுப்பக் கூடாது என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் மேட்டூரில் செய்தியாளர்களிடம் வீரமணி பேசுகையில், இலங்கைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண இந்தியா விரும்பினால், இலங்கைஅரசையும், விடுதலைப் புலிகள் போன்ற போராட்டம் நடத்துபவர்களையும் அழைத்து இந்தியா பேச்சவார்த்தை நடத்த வண்டும்.

அகதிகளாகக் கூட ஈழத் தமிழர்கள் இங்கே வர முடியாத சூழ்நிலை இருக்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சினை ஏதோ, சந்திரிகா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று பாராமல், பல லட்சக்கணக்காகதவித்து வரும் மக்களைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சியினரும் அணுக வேண்டும்.

இந்தப் பிரச்சினையில், மத்திய அரசு ஆரம்பத்தில் எடுத்த முடிவான இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப மாட்டோம் என்ற நிலையில், இருந்துமாறாமல் இருக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+