தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்த வார இறுதிக்குள் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்களாக இருந்த நிதிஷ் குமார், நவீன் பட்நாயக், உமா பாரதி ஆகியோர் ராஜிநாமாசெய்துவிட்டதையடுத்து அமைச்சரவையில் 3 இடங்கள் காலியாக உள்ளன.
அந்த மூன்று இடங்களை நிரப்புவதற்காக மத்திய அமைச்சரவை எப்போது மாற்றியமைக்கப்படும் என்றுஅரசியல்வாதிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந் நிலையில், இந்தியா டுடே நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வார இறுதியில் மத்திய அமைச்சரவைமாற்றியமைக்கப்படும் என்று வாஜ்பாய் தெரிவித்தார்.
அமைச்சரவையில் புதிய முகங்கள் சேர்க்கப்படுவர். தற்போதுள்ள சில அமைச்சர்களின் இலாகாக்கள்மாற்றியமைக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தப் பாதிப்பும்ஏற்படாத வகையில் அமைச்சரவை மாற்றம் இருக்கும். பொருளாதார அமைச்சரவையில் தக்க மாற்றம் இருக்கும்என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications