தமிழகத்தில் இன்று
புவனேஸ்வர்:
கிராமப் பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு தேடி நகர்ப்புறங்களுக்கு இளைஞர்கள் அதிகம் செல்வதைத் தடுக்ககிராமப் பகுதியிலேயே அவர்களுக் அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதுஎன்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சுந்தர்லால் பட்வா தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
வேலை வாய்ப்பு தேடி கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் நகர்ப் பகுதிகளுக்குச்செல்கின்றனர். இதனால், நகர்ப் பகுதியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரிக்கிறது. நகர்ப் புறங்களிலும் கிராமப்புற இளைஞர்களுக்குச் சரியான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆகவே, கிராமப் புற இளைஞர்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது. கிராமப்பகுதிகளிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அதனுடன் கிராமப்புற மேம்பாட்டையும் மேற்கொள்ளமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 4-ல் 3 பங்கினர் கிராமப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். அவர்களின்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளார்.அத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையும், அதிக கவனும் செலுத்தும்படியும் அவர் கூறியுள்ளார்.
கிராமப் பகுதிகளுக்கும், நகர்ப் புறங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க பல திட்டங்களைமத்திய அரசு தீட்டியுள்ளது. இதற்காகவே, பட்ஜெட்டில் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப் பகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கும், கிராமப் பகுதி மேம்பாட்டுக்கும் இந்த நிதி செலவிடப்படும்.கிராமப் புறங்களிலேயே இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திட்டத்துடன், கிராமப்பகுதி மேம்பாட்டுக்காக குடிநீர் வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, தகவல் தொடர்பு வசதி, வீட்டு வசதி, கல்விவசதி, மின் வசதி போன்றவை செய்து தரப்படும்.
கிராமப் பகுதி இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தால், அதன்பிறகு அவர்கள் நகர்ப் புறங்களை நோக்கி செல்வதைத் தடுக்க முடியும். இதை இலக்காகக் கொண்டு தான் மத்தியஅரசு திட்டங்களை வகுத்துள்ளது என்றார் பட்வா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications