தமிழகத்தில் இன்று
புவனேஸ்வர்:
கிராமப் பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு தேடி நகர்ப்புறங்களுக்கு இளைஞர்கள் அதிகம் செல்வதைத் தடுக்ககிராமப் பகுதியிலேயே அவர்களுக் அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதுஎன்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சுந்தர்லால் பட்வா தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
வேலை வாய்ப்பு தேடி கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் நகர்ப் பகுதிகளுக்குச்செல்கின்றனர். இதனால், நகர்ப் பகுதியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரிக்கிறது. நகர்ப் புறங்களிலும் கிராமப்புற இளைஞர்களுக்குச் சரியான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆகவே, கிராமப் புற இளைஞர்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது. கிராமப்பகுதிகளிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அதனுடன் கிராமப்புற மேம்பாட்டையும் மேற்கொள்ளமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 4-ல் 3 பங்கினர் கிராமப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். அவர்களின்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளார்.அத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையும், அதிக கவனும் செலுத்தும்படியும் அவர் கூறியுள்ளார்.
கிராமப் பகுதிகளுக்கும், நகர்ப் புறங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க பல திட்டங்களைமத்திய அரசு தீட்டியுள்ளது. இதற்காகவே, பட்ஜெட்டில் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப் பகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கும், கிராமப் பகுதி மேம்பாட்டுக்கும் இந்த நிதி செலவிடப்படும்.கிராமப் புறங்களிலேயே இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திட்டத்துடன், கிராமப்பகுதி மேம்பாட்டுக்காக குடிநீர் வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, தகவல் தொடர்பு வசதி, வீட்டு வசதி, கல்விவசதி, மின் வசதி போன்றவை செய்து தரப்படும்.
கிராமப் பகுதி இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தால், அதன்பிறகு அவர்கள் நகர்ப் புறங்களை நோக்கி செல்வதைத் தடுக்க முடியும். இதை இலக்காகக் கொண்டு தான் மத்தியஅரசு திட்டங்களை வகுத்துள்ளது என்றார் பட்வா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications