தமிழகத்தில் இன்று
புவனேஸ்வர்:
கிராமப் பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு தேடி நகர்ப்புறங்களுக்கு இளைஞர்கள் அதிகம் செல்வதைத் தடுக்ககிராமப் பகுதியிலேயே அவர்களுக் அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதுஎன்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சுந்தர்லால் பட்வா தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
வேலை வாய்ப்பு தேடி கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் நகர்ப் பகுதிகளுக்குச்செல்கின்றனர். இதனால், நகர்ப் பகுதியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரிக்கிறது. நகர்ப் புறங்களிலும் கிராமப்புற இளைஞர்களுக்குச் சரியான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆகவே, கிராமப் புற இளைஞர்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது. கிராமப்பகுதிகளிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அதனுடன் கிராமப்புற மேம்பாட்டையும் மேற்கொள்ளமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 4-ல் 3 பங்கினர் கிராமப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். அவர்களின்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளார்.அத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையும், அதிக கவனும் செலுத்தும்படியும் அவர் கூறியுள்ளார்.
கிராமப் பகுதிகளுக்கும், நகர்ப் புறங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க பல திட்டங்களைமத்திய அரசு தீட்டியுள்ளது. இதற்காகவே, பட்ஜெட்டில் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப் பகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கும், கிராமப் பகுதி மேம்பாட்டுக்கும் இந்த நிதி செலவிடப்படும்.கிராமப் புறங்களிலேயே இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திட்டத்துடன், கிராமப்பகுதி மேம்பாட்டுக்காக குடிநீர் வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, தகவல் தொடர்பு வசதி, வீட்டு வசதி, கல்விவசதி, மின் வசதி போன்றவை செய்து தரப்படும்.
கிராமப் பகுதி இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தால், அதன்பிறகு அவர்கள் நகர்ப் புறங்களை நோக்கி செல்வதைத் தடுக்க முடியும். இதை இலக்காகக் கொண்டு தான் மத்தியஅரசு திட்டங்களை வகுத்துள்ளது என்றார் பட்வா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications