தமிழகத்தில் இன்று
தீவி-ர-வா-தி-கள் ஊ-டு-ரு-வல்: கடல் பகுதியில் தீவி-ர கண்--கா-ணிப்-புக்-கு கருணாநிதி உத்தரவு
சென்னை:
இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழககடல் எல்லை மூலம் தீவிரவாதிகள் யாரும் இந்தியாவுக்குள் ஊடுறுவி விடாமல்விழிப்புடன் இருக்குமாறு கடலோர மாவட்ட கலெக்டர்களை முதல்வர் கருணாநிதிகேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும்காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை முடித்து வைத்து அவர் ஞாயிற்றுக்கிழமைபேசியதாவது:
அத்தியாவசியப் பொருட்கள் தமிழக கடல் பகுதி வழியாக கடத்தப்படுகிறதாஎன்பதையும் மாவட்ட கலெக்டர்கள் விழிப்புடன் கண்காணித்து வர வேண்டும்.
இலங்கையிலிருந்து அகதிகளாக வருவோரை நன்றாக சோதனை செய்து அவர்கள்அகதிகள்தான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே முகாம்களுக்கு அனுப்பவேண்டும். கடலோக் காவல் படையினர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள்முன்னிலையில் அவர்களை விசாரிக்க வேண்டும்.
கள்ளச்சாராய பெருக்கத்தை ஒழிக்க தமிழக காவல்துறையினரும், மாவட்டகலெக்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் சட்டம், ஒழுங்குபாதிக்காதவாறும் இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்.
மாமூல் வாங்கினால் கடும் தண்டனை:
கள்ளச்சாராய வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் போலீஸாருக்குக் கடும் தண்டனைகொடுக்க வேண்டும்.
காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் இறப்பதைத் தவிர்க்க மாவட்டஎஸ்.பிக்கள், காவல் நிலையங்களுக்கு அடிக்கடி திடீர் விஜயம் செய்து வர வேண்டும்என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications