தமிழகத்தில் இன்று
திருநெல்வேலி:
குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை வீசத்தொடங்கியுள்ளது.
ஐந்தருவி, தேனருவி, செண்பகா அருவி என அருவிகள் நிறைந்த குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில்தான்சீசன் துவங்கும். இந்த முறை மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கி விட்டது. அக்னி நட்சத்திரம் முடிந்தநிலையில் சீசன் தொடங்கி விட்டது.
நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த ஒருவாரமாகவே குளிர்ந்தகாற்றும், சாரலும் பெய்து வந்தது. வெள்ளிக்கிழமை இரவு முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.சனிக்கிழமை மெயின் பால்சில் நீர் விழ ஆரம்பித்தது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, தேனருவிகளில் நீர் விழஆரம்பித்தது.
தற்போது அனைத்து அருவிகளிலிருந்தும் நீர் வர ஆரம்பித்துள்ளது. ஐந்தருவியின் கிளை அருவிகளில் நீர்வரத்துஅதிகமாகியுள்ளது. சீசன் துவங்குவது ஜூன் மாதத்தில்தான் என்பதால் போக்குவரத்து சரியாக இல்லை. சொந்தகார்கள், வாகனங்கள் வைத்திருப்போர் மட்டுமே தற்போது வந்து செல்கின்றனர். ஜூன் மாதத்தில் குற்றலாத்திற்குவருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.