Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஏர் இந்தியா பங்குகளை வாங்கும் திட்டம் இல்லை - எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு

துபாய்:

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் திட்டம் ஏதும் இல்லை என்று ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த, எமிரேட்ஸ் விமான நிறுவனம்அறிவித்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஒரு பகுதியை, வெளிநாட்டுவிமான நிறுவனங்களுக்கு விற்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந் நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை வாங்க எமிரேட்ஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்வெளியாகின. இத் தகவலை எமிரேட்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

இந்திய விமான நிறுவனங்களின் பங்குகளை வாங்க எமிரேட்ஸ் நிறுவனம் விரும்பவில்லை. ஏற்கெனவே, ஏர் லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 40 சதவீதபங்குகளை வைத்துள்ளோம் என்றார் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் ஷேக் அகமத் பின் சயீத் அல் மக்டோவம்.

ஏர் இந்தியா பங்குகளை நாங்கள் வாங்கயிருப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. அதில் எங்களுக்கு விருப்பமில்லை. உலகம் முழுவதையும் நாங்கள்வாங்கமுடியாது. அதுவும் 26 சதவீத பங்குகள் என்பது மிகவும் குறைவு. அதன் மூலம் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டு வரமுடியாது என்றார் அவர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+